இன்று வேளாண்மைத் துறைக்கு அடுத்த படியாக கிராமப்புறங்களில் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கால்நடைத்துறை. அதில் கிராமப் புற பெண்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், பல சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், படித்த பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் என பல கோடி பேர் பணிபுரிகின்றனர். அத்துடன் நாள்தோறும் பல லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகிலேயே அதிகப்படியாக பால் உற்பத்தி செய்யும் நாடாக விளங்கும் நமது இந்தியா, உலகின் மொத்த உற்பத்தியில் 21 சதவீதத்தை கொண்டுள்ளது. சுமார் 186.1 மில்லியன் டன்கள் என்ற உற்பத்தி அளவை 2018ம் ஆண்டில் அடைந்து விட்ட நமது நாட்டில் தனி மனித பால் அளவு நாள் ஒன்றுக்கு 375 கிராம் என்ற அளவில் உள்ளது. மொத்த பால் உற்பத்தியில் பாதி பால் எருமை மாட்டின் பால். ஆனால் தற்போது பசு மாட்டுப் பாலின் உற்பத்தி மிக வேகமாக அதிகரித்து வரு கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக 5.9 சதவீதம் என்ற வருடாந்திர அளவில் வளர்ந்து வரும் இத்துறையில் பல பால் கூட்டுறவு நிறுவனங்கள், இந்திய நிறுவ னங்கள், பல பன்னாட்டு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. சுமார் 5.67 லட்சம் கோடி மதிப்புள்ள பால்துறை குறுகிய காலத்தில் பத்து லட்சம் கோடி யாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைச் சூழலில் அதிகளவு வேலைவாய்ப்புகள், வருமானம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ள இத் துறையின் செயல்பாடுகள், நிகழ்கால பிரச்சனை கள், எதிர்கால சவால்களை ஒருநல்வாய்ப்பாக மாற்றினால் நமது மாநிலம் மற்றும் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக்கும், நமது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் நன்மை தருவதாக இருக்கும்.
தேங்கிக் கிடக்கும் பால் பவுடர்
தற்போது பால் கொள்முதல் விலையாக தேசிய அளவில் கூட்டுறவுகள் வழங்குவது ஒரு லிட்டருக்கு ரூ.30 என்ற அளவில் உள்ளது. நமது நாட்டின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவன மான அமுல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சமீ பத்தில் லிட்டருக்கு ரூ.2 கொள்முதல் விலையில் உயர்த்தி அறிவித்துள்ளது. மறுபுறம் நமது நாட்டில் பால்துறையில் ஏற்பட்டுள்ள மெத்தனப் போக்குக் காரணமாக சுமார் 1,60,000 டன்கள் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்கிப் போய் உள்ளது. இதனால் நமது உள்நாட்டு சந்தைகளிலும் அதிகளவு பால் கொள்முதல் செய்யப்படவில்லை. சுமார் 5 முதல் 7 சதவீதம் வரை தேசிய அளவில் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. மறுபுறம் பல தனியார் பால் நிறுவனங்களும் தங்களது நேரடி கொள்முதல் அளவை குறைத்துவிட்டு பால் பவுடர்களை பயன்படுத்தி அதிக லாபம் சம்பாதித்து வருகின்றன. இத்தகைய நடைமுறைச் சூழல் சந்தைகளில் மாறி வருகிறது. பால் பவுடர் விலை கிலோ ரூ.140 என்ற விலையில் இருந்து ரூ.175 வரை தற்போது உயர்ந் துள்ளது. இருப்பினும் பால் உற்பத்தியாளர்களு க்கு கால்நடைத் தீவன விலை உயர்வு. பராம ரிப்புச் செலவுகள் மற்றும் குறைந்த பால் கொள் முதல் விலை காரணமாக அதிக லாபம் கிடைக்க வில்லை. இத்தகைய சூழலில் பெருகிவரும் மக்கள் தொகை, நமது நாட்டின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தேவைப் படும் புரதச்சத்துகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பால் உற்பத்தித் துறை சந்திக்கும் இடர்ப்பாடுகளை, பிரச்சனைகளை மற்றும் சவால்களை (constraints, problems and challenges) ஒரு நல்வாய்ப்பாக மாற்றினால் நம்மால் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
புதிய வாய்ப்புகள்
தற்போது நமது நாட்டில் பால் உற்பத்தி பெருகி வந்தாலும் கால்நடை விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு லாபம் தருவதாக இல்லை. மேலும் அதிகளவு செலவினங்கள் மற்றும் தொடர் முதலீடுகள் தேவைப்படும் துறையாக உள்ளதால் பால் உற் பத்தியில் உரிய மற்றும் லாபகரமான விலை கிடைத்தால் மட்டுமே புதிய இளைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை ஈர்க்கும்துறை யாக மாறும். எதிர்காலத்தில் இது அமையும். இத்தகைய சூழலில் பால் பொருட்கள் உற்பத்தி, தேக்கம், பயன்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமது ஏற்றுமதிச் சந்தைகளை வலுப் படுத்தவும், புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதும் அவசியம். நம்மை போன்று பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ரஷ்ய நாட்டில் சமீபத்தில் நடத்தப் பட்ட 10வது பால் உற்பத்தியாளர்கள் மாநாட்டில் பேசிய ரஷ்ய வேளாண் அமைச்சர், உலகச் சந்தை களில் பால் பொருட்கள் விற்பனை வாயிலாக தங்கள் நாடு அதிகளவு வருவாய் மற்றும் லாபம் ஈட்டுவதாகவும், வருகின்ற 2025ம் ஆண்டிற்குள் 1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வெளிநாட்டு பால் ஏற்றுமதி வாயிலாக பெறுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய வெளி நாட்டு ஏற்றுமதி வாய்ப்புகளை நமது வேளாண் மற்றும் பால் வளர்ச்சித் துறைகள். வர்த்தகத் துறைகள் மேற்கொண்டால் பால் உற்பத்தி வாயி லாக அதிக அந்நியச் செலாவணி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
ஊட்டச்சத்து குறைபாடு நீங்க
இரண்டாவதாக, உலகில் அதிகளவு ஊட்டச் சத்துக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களை கொண்ட நாடாக நமது நாடு உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகள் மற்றும் புரதங்க ளை நமது பால் பொருட்கள் வாயிலாக வழங்க முடியும். இத்தகைய சூழலில் பெருகி வரும் பால் உற்பத்தியை பயனுள்ள முறையில் பயன்படுத்த வும், நமது நாட்டின் மனித ஆற்றலை உயர்த்த வும் தற்போது நமது நாட்டில் பல மாநிலங்களில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள மதிய உணவு திட்டங்களில், காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு மற்றும் அரசு உதவியால் இயங்கும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், பல்க லைக்கழகங்களின் உணவு விடுதிகள், அரசு மருத் துவமனைகளில் வழங்கச் செய்ய வேண்டும். நமது தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலத் தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் நடை முறையில் இருந்தபோது 1962-1963 முதல் அமெ ரிக்க தொண்டு நிறுவனம் கேர் (“CARE”) உதவி யுடன் மாணவர்களுக்கு பால் பவுடர், சத்துமாவு மற்றும் உணவு சமைக்க சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் வழங்கப்பட்டு நமது நாட்டிலும், உலக அளவிலும் கல்வி மற்றும் குழந்தைகள் வளர்ச்சி யில் மத்திய உணவுத்திட்டம் பாராட்டைப் பெற்ற தை நாம் மறந்துவிட முடியாது. இத்தகைய வளர்ச்சி முன் மாதிரிகளை கொண்டு தேசம் முழு வதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பால் பொருட்களை வழங்கினால் நிச்சயமாக குறுகிய காலத்தில் நமது ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்ச னைகளுக்கு நல்ல தீர்வுகள் பெற முடியும்.
ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில்...
மேலும் நமது நாட்டில் தற்போது கிராமப் புறங்களில் செயல்பாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய சமூக பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத்திட்டம்) வேலை செய்யும் கிராமப்புற பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு காலை அல்லது மதிய வேளையில் சிற்றுண்டி அல்லது மதிய உணவை அறிமுகம் செய்து அவர்களுக்கு பால் பொருட்களை வழங்குவதன் வாயிலாக கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்யும். நமது நாடு உலக அளவில் மனிதவள மேம்பா ட்டுக் குறியீடு மற்றும் பசி குறையீடு ஆகிய வளர்ச்சிக் குறியீடுகளில் பின் தங்கி இருக்கும் நிலை மாறும். இத்தகைய மத்திய மற்றும் மாநில அரசு களின் ஆக்கப்பூர்வமான தலையீடுகள் வாயி லாக நமது பால் மற்றும் கால்நடைத்துறையின் தேக்கம் நீங்கும். தொடர் வளர்ச்சி ஏற்படுவ துடன் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் முதலீடு கள் பெருகும்.
கட்டுரையாளர் : இணைப்பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம்-608 002